Feeds

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நெல்லிக்குப்பம் நகர தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

important news

லால்பேட்டை: மார்க்கத்திற்கு எதிரான சடங்குகள் நடத்துவதில் கலவரம்!

தொடர் குண்டு வெடிப்புகள்: த.மு.மு.க கடும் கண்டனம்

கிருஷ்ணகிரி: அமெரிக்காவுடனான அணு உடன்பாடு ஒப்பந்தத்தைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

எம்.பிகளின் குதிரை பேரம்! கேவலப்பட்ட ஜனநாயகம்!!

bangalore blasts: Sequence of events with video

TMMK president awarded doctorate for his thesis on Islamic banks

Demonstration to oppose Narendra Modi’s Chennai visit

Table Misra report in Parliament

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்படவேண்டும்?

அமர்நாத் நில விவகாரம்: கொந்தளிக்கும் காஷ்மீர்!!

பதினொன்றாம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரையிலும் கல்வி உதவி

முஸ்லிம் மாணவர்கள்! பொறியியல் மற்றும் மருத்துவத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டின் முழுமையான வெற்றி

திருச்சியில் தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்ி

தமுமுக தலைமையிலே... கொள்கை விளக்கப் பாடல்கள் வெளியீடு

Thursday, July 17, 2008

ஜித்தா மண்டல தமுமுக பொதுக்குழு கூட்டம்

04-07-2008 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஜித்தா தலைவர் புதுமடம் இப்ராகிம் தலைமையில் சரபியா லக்கி தர்பார் ஹோட்டலில் ஜித்தா மண்டல தமுமுக பொதுக்குழு கூட்டம் சிறப்பாய் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மண்டல துணைத் தலைவர் அலாவுதின் பாகவி அவர்கள் தமுமுகவின் இன்றைய அரசியல் நிலைபாடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இம்தாதுல்லாஹ் ஜமாலி அவர்கள் தமுமுகவின் தாஃவா பணிகள் என்ற தலைப்பிலும்,சகோதரர் வரிசை முஹம்மது தமுமுகவின் அவசியம் ஏன்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்சியும் நடைபெற்றது உறுப்பிர்கள் கேள்விக்கு கிளை நிர்வாகிகள் பதில் அளித்தார்கள்.

100க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சிக்கு பைசல்யாகிளை ருவைஸ் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணி சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.நிகழ்ச்சியை தலைவர் தொகுத்து வழங்கினார்.

Monday, July 14, 2008

பத்தமடையில் தமுமுகவின் புதிய கிளை



திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் ஜீன் 23 ஆம் தேதி தமுமுகவின் புதிய கிளையும், தமுமுக கொடியேற்று நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் டாக்டர். பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான் முன்னிலை வகித்தார்.

உக்கடத்தில் பள்ளி கட்டிட அடிக்கல் நடும் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஜி.எம்.நகர் தெற்கு உக்கடத்தில் அமைந்துள்ள தரீக்கத்துல் இஸ்லாம் நர்ஸரி பிரைமரி ஸ்கூல் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா 06.07.08 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு வக்ப் வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி ் கலந்து கொண்டு புதிய பள்ளிக்கூடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மேயர் ஆர். வெங்கடாச்சலம், மாநகராட்சி உறுப்பினர்கள், தமுமுக மாவட்ட, கிளை நிர்வாகிகள், கோவை அத்தார் ஜமாஅத் தலைவர், கேரளா முஸ்லிம் ஜமாஅத் தலைவர்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Sunday, July 13, 2008

நரேந்திரமோடியின் சென்னை வருகையைக் கண்டித்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது


குஜராத் இனப்படுகொலையாளன் நரேந்திரமோடி (11.07.08) அன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.

தகவல் அறிந்தவுடன் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இரண்டு மணி நேர இடைவேளைக்குள் மாலை 7.மணியளவில் தமுமுகவின் சார்பாக மாநிலச் செயலாளர் அப்துஸ் சமது தலைமையில் அரும்பாக்கத்தில் கல்லூரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.


நெல்லிக்குப்பத்தில் இரத்ததான முகாம்


நெல்லிக்குப்பம் நகர தமுமுக மற்றும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமிற்கு தமுமுக கிளைத் தலைவர் அப்துல் ரகீம் தலைமை தாங்கினார். நகர மருத்துவ சேவை அணி செயலாளர் சர்புதீன் வரவேற்றார். நகர செயலாளர் அஷ்ரப் அலி, இஸ் லாமிய சேவை அமைப்பு பொறுப்பா ளர் அசன் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இரத்ததான முகாமில் 36 பேர் இரத்ததானம் செய்தனர்.

ராஜஸ்தானில் பொதுச்செயலாளர்!


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 21.6.2008 அன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற அனைத்து முஸ்லிம் பிரதி நிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து தமுமுகவின் பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு இடஒதுக கீட்டின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட முன்னாள் நிர்வாகி மரணம்

கடலூர் மாவட்ட தமுமுகவின் முன்னாள் துணைத் தலைவரும், ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவருமான லால்பேட்டை முனவர் உசேன் (44) அவர்கள் சென்ற 7.6.08 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.
மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைத் அவர்களும், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் அன்னாரின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்றனர்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவிக்க வேண்டிய சகோதரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம்.
அராபத் (மருமகன்)57, வடக்குத் தெரு,லால்பேட்டை 608 303கடலூர் மாவட்டம்செல்: 98949 08374